பிளாஸ்டிக்கை ஒழிக்க
வழியின்றி, கடைகளில்
வாங்கும் பொருட்களுக்கு
போடப்படும் பிளாஸ்டிக்
உறைக்கு பணம் வசூலிக்கத்
தொடங்கிய பின்னரும், அதை
உபயோகிப்பது
குறைந்தபாடில்லை.
பிளாஸ்டிக்கை முறையாக
மறுசுழற்சி செய்யாமல்
விடுவதால், நீரிலும்,
நிலத்திலும் அதிகமான
பிளாஸ்டிக் குப்பை சேர்ந்து
நம்மை அச்சுறுத்தி
வருகிறது. இந்நிலையில்,
அமெரிக்காவின்
ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக
ஆராய்ச்சியாளர்களும்,
சீனாவின் பெய்ஹாங்
பல்கலைக்கழக
ஆராய்ச்சியாளர்களும்
இணைந்து, பிளாஸ்டிக்கை
ஒழிக்கும் வழியைத் தேடி
ஆராய்ச்சி ஒன்றை
மேற்கொண்டுவந்தனர்.
பிளாஸ்டிக்கின் அழிவிலாத்
தன்மை அனைவரையும்
அச்சுறுத்தி வந்த நிலையில்,
கருப்புநிற ஒருவகை
வண்டின் லார்வாவை (புழு)
பிளாஸ்டிக்கை மட்கச்
செய்யும் ஆராய்ச்சிக்கு
பயன்படுத்தினர். இந்த
புழுவின் குடலில் உள்ள ஒரு
வகை பாக்டீரியா ‘பாலியஸ்திரனை ’
உட்கொண்டாலும் அதனை
முழுமையாக செரிக்க
வைக்க வைக்கின்றது என
ஆய்வில் தெரியவந்துள்ளது.
சுமார் நூறு
புழுக்களுக்கு 34 முதல் 39
மில்லி கிராம்கள் இந்த ‘ஸ்டைரோபோம் ’(மென்மைப்படுத்திய
பாலியஸ்திரன்) ஒவ்வொரு
நாளும் உணவாக
வழங்கப்பட்டு வந்தது.
எனினும், இந்தப்
புழுக்களுக்கு அது
பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
அவை நல்ல
ஆரோக்கியத்துடன்
இருப்பதாகவும்
தெரியவந்தது என இந்த
ஆராய்ச்சியாளர்கள்
தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி இவற்றை
நமது நிலங்களிலும்
விவசாயத்துக்கு
பயன்படுத்தலாம் எனவும்
தெரியவந்துள்ளது. இந்த
ஆராய்ச்சியை மேம்படுத்தும்
முயற்சியில் தற்போது
விஞ்ஞானிகள்
ஈடுபட்டுள்ளனர். இந்த முயற்சி
வெற்றியடைந்தால்,
பூமியில் உள்ள பிளாஸ்டிக்
மாசுவால் ஏற்படும்
பிரச்சனைகளை ஒழிக்க
உதவும் என நம்பலாம்!
Sunday, October 4, 2015
பிளாஸ்டிக் பாக்டீரியா
Subscribe to:
Post Comments (Atom)
பயனுள்ள அதிசயமான தகவல் நண்பரே.. - கில்லர்ஜி
ReplyDeleteதகவல் அருமை
ReplyDelete